செய்திகள்

முதுகுளத்தூர் அருகே தந்தை ஓட்டிய வேன் மோதி குழந்தை பலி

Published On 2018-08-21 06:54 GMT   |   Update On 2018-08-21 06:54 GMT
முதுகுளத்தூர் அருகே தந்தை ஓட்டிய வேனின் அடியில் சிக்கி உடல் நசுங்கி குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அருகே உள்ள கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). சரக்கு வேன் ஓட்டி தொழில் செய்து வந்தார்.

இன்று காலை வீட்டில் இருந்து அவர் வேலைக்கு புறப்பட்டார். அப்போது சரக்கு வேனை பின்னோக்கி எடுத்தார்.

அந்த நேரத்தில் அவரது மகன் வருண் (வயது 2) வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தான். அவன் வேனின் பின்புறம் நின்றதை முருகன் கவனிக்கவில்லை.

பின்னோக்கி வந்த வேன் குழந்தை வருண் மீது மோதியது. வேனின் அடியில் சிக்கிய வருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News