செய்திகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டம்
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதியம் மற்றும் பஞ்சப்படி வழங்கிடக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன், பயிற்சி டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 40 பேர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதியம் வேளையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள். ஒரே நாளில் டாக்டர்கள் போட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு ஆஸ்பத்திரி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதியம் மற்றும் பஞ்சப்படி வழங்கிடக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன், பயிற்சி டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 40 பேர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதியம் வேளையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள். ஒரே நாளில் டாக்டர்கள் போட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு ஆஸ்பத்திரி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.