செய்திகள்

தனியார் நிறுவனத்தை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-08-19 16:44 GMT   |   Update On 2018-08-19 16:44 GMT
அன்னவாசல் அருகே தனியார் நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அன்னவாசல்:

அன்னவாசல் அருகே ஆரீயூரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கரும் புகைகள் மற்றும் தூசிகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு உருவாகிறது எனவும், சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறி அந்த நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த தனியார் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

இதையடுத்து அந்த நிறுவன அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
Tags:    

Similar News