செய்திகள்
ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயம்
வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சரோஜா (வயது 55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் இது வரை வீட்டுக்கு வரவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை.
இது குறித்து சரோஜாவின் மகன் யுவராஜா ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.