செய்திகள்

வடமதுரை அருகே மதிப்பெண் குறைந்ததால் தீக்குளித்த பிளஸ்-1 மாணவி

Published On 2018-08-18 08:40 GMT   |   Update On 2018-08-18 08:40 GMT
வடமதுரை அருகே பரீட்சையில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:

வடமதுரை அருகே காணப்பாடியைச் சேர்ந்தவர் செல்வம் மகள் புவனேஸ்வரி (வயது 16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளியில் பரீட்சை நடந்தது. இதில் புவனேஸ்வரி குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்ட புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News