செய்திகள்

தேனி அருகே மருதமர கட்டைகள் கடத்தியவர் கைது

Published On 2018-08-17 15:08 IST   |   Update On 2018-08-17 15:08:00 IST
தேனி அருகே மருத மர கட்டைகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தேனி:

தேனி அருகே உத்தமபாளையம் பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி பெரியாறு, வைகை வடிநில பாசன ஆய்வாளர் சேதுபதி ராஜ் அணைப்பட்டி கம்பம் பிரிவு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தனியார் தோட்டத்தில் இருந்து ஒருவர் மரக்கட்டைகளை எடுத்து வந்தார்.

அவரை பிடித்து விசாரித்த போது அந்த நபர் கோகிலாபுரம் அணைப்பட்டி சண்முநாத கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (வயது 48) என்பது தெரிய வந்தது. மேலும் மருதமர கட்டைகளை திருடி வந்ததும் தெரிய வந்தது.

அவரை ராயப்பன்பட்டி போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் செல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News