செய்திகள்
அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் மீது மோசடி புகார்- போலீஸ் நிலையத்தில் பெண்கள் முற்றுகை
அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடிதுறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை அண்ணாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகள் இடிக்கப்பட்டது.
இதில் வீடுகளை இழந்தவர்களுக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து அவர்கள் அப்போது அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்த சசிகலா நாகலிங்கத்திடம் முறையிட்டனர்.
அவர், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கி தருவதாக கூறி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இது பற்றி பணத்தை இழந்தவர்கள் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க காசிமேடுமீன்பிடி துறைமுக போலீசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடிதுறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
புதுவண்ணாரப்பேட்டை அண்ணாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகள் இடிக்கப்பட்டது.
இதில் வீடுகளை இழந்தவர்களுக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து அவர்கள் அப்போது அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்த சசிகலா நாகலிங்கத்திடம் முறையிட்டனர்.
அவர், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கி தருவதாக கூறி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இது பற்றி பணத்தை இழந்தவர்கள் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க காசிமேடுமீன்பிடி துறைமுக போலீசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடிதுறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews