செய்திகள்

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கார் மோதி வாலிபர் பலி

Published On 2018-08-15 12:20 GMT   |   Update On 2018-08-15 12:20 GMT
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை அருகே நின்று கொண்டிருந்த காரை பழக்கடையில் பணிபுரிந்து வருபவர் ஓட்ட 
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கட்டுப் பாட்டை இழந்த கார் அதிவேகமாக புதிய பஸ் நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பறை சுவற்றில் மோதியது. 

அங்கு படுத்திருந்த பனைக்குளத்தைச்சேர்ந்த மகாலிங்கம் என்ற வாலிபர் மீது  அந்த  கார் ஏறி இறங்கியது. ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகாலிங்கத்தை அருகிலிருந்த பொதுமக்கள் ராமநாதபுரம் அரசு  மருத்துவ மனைக்கு அனுப்பினர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். 

இவர் புதிய பஸ்  நிலையத்தில் கட்டண கழிப்பறை துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News