செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடைகள் மூடல் - கரூர் கலெக்டர் தகவல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(புதன்கிழமை) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களையும் மூட வேண்டும். மேலும் மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது.
இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன் படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(புதன்கிழமை) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களையும் மூட வேண்டும். மேலும் மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது.
இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன் படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.