செய்திகள்
விருத்தாசலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மணிகண்டன் தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தாய்-மகன் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை மணிகண்டன் எழுந்து பூஜை அறைக்கு சென்றார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதையும், பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மங்கலம் பேட்டை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மணிகண்டன் தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தாய்-மகன் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை மணிகண்டன் எழுந்து பூஜை அறைக்கு சென்றார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதையும், பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மங்கலம் பேட்டை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.