செய்திகள்
அரக்கோணத்தில் சாமி ஊர்வலத்தில் 4 பேருக்கு அரிவாள்வெட்டு - போலீஸ் குவிப்பு
அரக்கோணத்தில் நேற்று இரவு சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் எம்.ஆர். கண்டிகையில் நேற்று அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. அங்குள்ள அப்பகுதி இளைஞர்கள் முன்னாள் ஆடிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.
கட்டை, அரிவாளால் தாக்கி கொண்டனர். இதில் மணிவண்ணன் (வயது 22), லோகேஷ்குமார் (34), சம்பத் (43), பாலு (44) ஆகியோருக்கு அரிவால் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றபட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.ஆர். கண்டிகையில் போலீசார் குவிக்கபட்டனர். 4 பேரை வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
அரக்கோணம் டவுன் எம்.ஆர். கண்டிகையில் நேற்று அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. அங்குள்ள அப்பகுதி இளைஞர்கள் முன்னாள் ஆடிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.
கட்டை, அரிவாளால் தாக்கி கொண்டனர். இதில் மணிவண்ணன் (வயது 22), லோகேஷ்குமார் (34), சம்பத் (43), பாலு (44) ஆகியோருக்கு அரிவால் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றபட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.ஆர். கண்டிகையில் போலீசார் குவிக்கபட்டனர். 4 பேரை வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.