செய்திகள்

சமாதிகளை மாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி- தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு

Published On 2018-08-13 08:17 GMT   |   Update On 2018-08-13 08:17 GMT
மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது தொடர்பாக டிராபிக் ராமசாமி இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். #HighCourt #TrafficRamasamy
சென்னை:

ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி கூறியதாவது:-

‘மெரினா கடற்கரையில், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்ட பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ததை எதிர்த்தும், அங்குள்ள மறைந்த முதல்- அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சமாதிகளை கிண்டிக்கு மாற்ற வேண்டும். 3 பேரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.


இந்த நிலையில் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, என்னுடைய வழக்கை என் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தும் தள்ளுபடி செய்துள்ளது. அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ‘இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்’ என்று அறிவித்தார். #HighCourt #TrafficRamasamy
Tags:    

Similar News