செய்திகள்

கரூரில் லாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2018-08-12 16:25 GMT   |   Update On 2018-08-12 16:25 GMT
கரூரில் லாரியில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
கரூர்:

கரூர் மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் தெரு அருகே நேற்று முன்தினம் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரி டிரைவர், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஞானவேலை (வயது 24) கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News