செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி 15-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

Published On 2018-08-11 09:39 GMT   |   Update On 2018-08-11 09:39 GMT
கோவையில் சுதந்திர தினத்தையொட்டி 15-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.
கோவை:

கோவை கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபான கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு மன மகிழ்மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள் ஆகியவற்றிற்கு 15-ந் தேதி (புதன்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News