செய்திகள்

கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் மரணம்

Published On 2018-08-10 10:07 GMT   |   Update On 2018-08-10 10:07 GMT
கருணாநிதி மரணம் தொடர்பான ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
கடலூர்:

கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48), தி.மு.க. பிரமுகர். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேள்விபட்ட சக்திவேல் அதிர்ச்சியடைந்தார். மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். கருணாநிதி மரணம் தொடர்பான ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்தபோது துக்கம் தாங்காமல் சக்திவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடலுக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். சக்திவேலை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News