செய்திகள்

கருணாநிதி சந்தன பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ வாசகம்

Published On 2018-08-08 09:09 GMT   |   Update On 2018-08-08 09:09 GMT
கருணாநிதியை நல்லடக்கம் செய்ய உள்ள பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. #RIPKarunanidhi
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்கிடையே மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அதன்பின் அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அவரது உடல் வைக்கப்படும் சந்தன பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது.
Tags:    

Similar News