செய்திகள்
போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் ராஜாஜி ஹால் - கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK
சென்னை:
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகர கூடுதல் கமிஷ்னர் ஜெயராம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.