செய்திகள்

மாமல்லபுரம் அருகே சென்னை ஓட்டல் உரிமையாளர் கார் விபத்தில் பலி

Published On 2018-08-06 06:26 GMT   |   Update On 2018-08-06 06:26 GMT
மாமல்லபுரம் அருகே சென்னை ஓட்டல் உரிமையாளர் கார் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

மாமல்லபுரம்:

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது 61). ஓட்டல் உரிமையாளர் இவர் கடந்த 4-ந் தேதி மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார்.

மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிழக்குகடற் கரை சாலையில் வந்த போது சாலை தடுப்பு தூணில் கார் மோதி கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த மணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மணி உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News