செய்திகள்
கனகதாரா

பேரணாம்பட்டு தொகுதி முன்னாள் அதிமுக பெண் எம்எல்ஏ மரணம்

Published On 2018-08-05 14:54 IST   |   Update On 2018-08-05 14:54:00 IST
பேரணாம்பட்டு தொகுதி முன்னாள் அ.தி.மு.க. பெண் எம்எல்ஏ மரணம் அடைந்தார். #ADMK

பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியை சேர்ந்தவர் கனகதாரா (வயது72). இவர் 2001-2005-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பேரணாம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தாய் சின்னபாப்பா(90), தங்கை நளியுடன் பேரணாம்பட்டில் வசித்து வந்தார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி வரை அறையை விட்டு வெளியேவரவில்லை. இதனால் அவரது உதவியாளர் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்து கிடந்தார். மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது கனகதாரா அ.தி.மு.க.வில் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளராக பதவியில் இருந்தார்.

தொகுதி சீரமைப்பில் பேரணாம் பட்டு தொகுதி நீக்கப்பட்டு தற்போது குடியாத்தம், ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News