செய்திகள்

திருமங்கலம் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2018-08-04 09:41 GMT   |   Update On 2018-08-04 09:41 GMT
திருமங்கலம் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

திருமங்கலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகள் செல்விமீனா (வயது 26). இவருக்கும், பரவை எஸ்.எம்.பி. நகரைச் சேர்ந்த சந்திரன் மகன் பாண்டி முருகன் (34) என்பவருக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக செல்விமீனா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியபின்கடந்த ஆண்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மனைவியை பிரிந்திருந்த காலத்தில் பாண்டிமுருகன் விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் குருலட்சுமி (21) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

இதை அறிந்த செல்வி மீனா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த பாண்டிமுருகனை கைது செய்தனர். அவரது தாய் வசந்தி, குருலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News