செய்திகள்

தாம்பரத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2018-08-04 09:20 GMT   |   Update On 2018-08-04 09:20 GMT
தாம்பரத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த எல்லம்மாள் (வயது85).

இவர் இன்று காலை தாம்பரத்தில் ஆஸ்பத்திரிக்கு நடந்து கொண்டிருந்தார். தர்ம தோட்டம் என்ற பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் எல்லாம்மாள் கழுத்தில் இருந்து 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்து எல்லம்மாள் தாம்பரம் போலீசில் புகார் செய்தார்.

Tags:    

Similar News