செய்திகள்

மாமல்லபுரத்தில் பைனான்சியர் மர்ம மரணம்

Published On 2018-08-04 12:05 IST   |   Update On 2018-08-04 12:05:00 IST
மாமல்லபுரத்தில் பைனான்சியர் நீச்சல் குளத்தில் மர்ம முறையில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் செல்வராஜ் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது திடீரென்று இறந்தார்.

அவர் நீச்சல் குளத்தில் டைவ் அடித்து குளித்த போது மூச்சுத்திணறி மயக்கம் அடைந்ததாகவும், நண்பர்கள் அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்ட தாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வ ராஜ் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News