செய்திகள்
ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் திருப்பத்தூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த போது எடுத்த படம்.

ரஜினி அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது- ரஜினியின் அண்ணன் பேட்டி

Published On 2018-08-04 05:33 GMT   |   Update On 2018-08-04 05:33 GMT
ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று திருப்பத்தூரில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #SathyaNarayanan
திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் கிராமத்தில் பாப்பாத்தியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி விழா நேற்று இரவு நடந்தது.

இதில் நடிகர் ரஜினி காந்தின் அண்ணன் சத்திய நாராயணன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் திருப்பத்தூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரஜினி நடிக்கும் புதிய படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ரஜினி விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவார். இதனை யாராலும் தடுக்க முடியாது. தமிழக மக்கள் ஆதரவுடன் ரஜினி முதல்-அமைச்சர் ஆவார்.


ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. மாநில நிர்வாகிகள் சுதாகர், ராஜுமகாலிங்கம், செயல்பாடுகளில் திருப்தி இல்லை. விரைவில் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

கிருஷ்ணகிரியில் எங்களது தாய், தந்தை கோவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. விரைவில் கோவில் திறக்கப்படும். இதில் ரஜினி கலந்து கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ரஜினி மக்கள் மன்ற திருப்பத்தூர் நகர இணை செயலாளர் கே.ஆதேஷ்குமார், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மற்றும் வேலு, கோவை ஆனந்த், கண்ணையன், பாபுராவ், சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர். #Rajinikanth #SathyaNarayanan
Tags:    

Similar News