செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மான் வேட்டையாடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-08-02 15:13 IST   |   Update On 2018-08-02 15:13:00 IST
உளுந்தூர்பேட்டை அருகே மான் வேட்டையாடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் அந்த பகுதியில் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

எறையூர் பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நாட்டு துப்பாக்கி ஒன்றும் வைத்திருந்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, எறையூர் பகுதியை சேர்ந்த டேவிட் (வயது 38), குழந்தைசாமி (28) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் எறையூர் காப்புக்காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் மான் வேட்டையாட சென்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து டேவிட், குழந்தைசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News