செய்திகள்

பெரம்பலூர் அருகே இளம்பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது

Published On 2018-08-03 11:28 GMT   |   Update On 2018-08-03 11:28 GMT
பெரம்பலூர் அருகே இளம்பெண்ணிடம் தகாத முறையில் பேசி கையை பிடித்து இழுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குன்னம்:

பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சரண்யா (வயது 25). சம்பவத்தன்று சரண்யா கடையில் இருந்தார். அப்போது பெரம்பலூர் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த ரவி (28) என்பவர் கடைக்கு வந்துள்ளார். அவர் சரண்யாவிடம் தகாத முறையில் பேசி கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார். 

இது குறித்து சரண்யா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

Tags:    

Similar News