செய்திகள்

மண்டலமாணிக்கத்தில் 96 பேருக்கு விலையில்லா எரிவாயு இணைப்பு

Published On 2018-08-02 07:32 GMT   |   Update On 2018-08-02 07:32 GMT
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மண்டலமாணிக்கம் ஊராட்சியைச் சேர்ந்த 96 பயனாளிகளுக்கு விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.
கமுதி:

கமுதி அருகே மண்டலமாணிக்கம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய வீட்டு வசதி வாரிய மற்றும் ஊரக திட்ட இயக்குநர் ருக்மணி தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன் முன்னிலையில் விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

கமுதி வட்ட வழங்கல் அலுவலர் காதர் முகைதீன் வரவேற்றார். மண்டலமாணிக்கம் ஊராட்சியைச் சேர்ந்த 96 பயனாளிகளுக்கு விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் தென்னரசு, யூனியன் ஆணையாளர்கள் தங்கப் பாண்டியன், வீரராகவன், வருவாய் ஆய்வாளர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News