செய்திகள்

பண்ருட்டி அருகே பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-08-02 10:53 GMT   |   Update On 2018-08-02 10:53 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பூர்ணிமா. இவரும் மேல்மாம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்பாண்டியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் அருள் பாண்டியன் மோட்டார் சைக்கிள் வேண்டும் என கேட்டு பூர்ணிமாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் வருந்திய பூர்ணிமா வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார். ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையொட்டி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பூர்ணிமா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் பூர்ணிமாவின் தாயார் முத்துலட்சுமி, புகார் கொடுத்தார். இதையொட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சப்-கலெக்டர் மேல் விசாரணை நடத்தினார்.
Tags:    

Similar News