செய்திகள்

மணப்பாறையில் இன்று காலை திடீர் வெடி சத்தத்தால் பொது மக்கள் பீதி

Published On 2018-08-01 11:17 GMT   |   Update On 2018-08-01 11:17 GMT
மணப்பாறையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி சத்தத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மணப்பாறை:

மணப்பாறையில் சுற்று வட்டாரா பகுதிகளான மணப்பாறை, வீரப்பூர், நல்லான் பிள்ளை, பழைய கோட்டை, கொப்பம்பட்டி, காட்டுபட்டி உள்ளிட்ட 13 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது.

உடனே பொது மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்றனர். இந்த திடீர் சத்தம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,

மணப்பாறை வீரமலை பகுதியில் ராணுவ வீரர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது கூட இந்த அளவுக்கு சத்தம் கேட்டது இல்லை. தற்போது அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் நடை பெற வில்லை என்று கூறினர். மேலும் இந்த திடீர் சத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் தெரிய வில்லை என்று கூறினர்.

கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடி சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டது. அது போல மணப்பாறையில் எதுவும் நிலஅதிர்வு ஏற்பட்டதா? என பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News