செய்திகள்

போடி பஸ் நிலையத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது

Published On 2018-07-31 10:36 GMT   |   Update On 2018-07-31 10:36 GMT
போடி பஸ் நிலையத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி சிலமலை அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவர் போடியில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கான பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் செல்லையாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கூறினார்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த அந்த நபர் செல்லையாவை கத்தியால் கையில் குத்தினார். இதில் வேதனையால் செல்லையா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

உடனே அந்த நபர் தப்பி ஓட முயன்றார். உ‌ஷரான பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் வடிவேல் என்கிற தீக்கொளுத்தி (வயது29), பிரபல ரவுடி என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News