செய்திகள்

முருங்கப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை

Published On 2018-07-31 10:22 GMT   |   Update On 2018-07-31 10:22 GMT
முருங்கப்பாக்கத்தில் மதுகுடிக்க மருமகள் பணம் கொடுக்க மறுத்ததால் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

முருங்கப்பாக்கம் சுதானா நகர் கோல்டன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). தமிழக போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியன் மது குடிக்க தனது மருமகள் ஜெயப்பிரதாவிடம் பணம் கேட்டார். ஆனால், மாத கடைசி என்பதால் தன்னிடம் பணம் இல்லை என்றும், கணவர் வந்தவுடன் பணம் வாங்கி தருவதாக ஜெயப்பிரதா கூறினார். இதனை ஏற்காமல் சுப்பிரமணியன் பணம் வைத்து கொண்டே மருமகள் பணம் தர மறுப்பதாக கருதினார்.

இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், வீட்டின் அறைக்குள் உள்பக்கமாக பூட்டி கொண்டு சேலையால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

வெகுநேரமாக அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஜெயப் பிரதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார்.

அப்போது மாமனார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணியன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News