செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2018-07-30 10:26 GMT   |   Update On 2018-07-30 10:26 GMT
ஜெயங்கொண்டம் அருகே திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அஞ்சலை (வயது55). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அஞ்சலை காதில் போட்டிருந்த தங்க தோடுகள் மற்றும் அவர் கையில் வைத்திருந்த ரூ.500 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து அஞ்சலை ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் வழக்கு பதிவு செய்து, பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் நகைகளை பறித்த குற்றத்துக்காக பூக்குழி கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் (வயது18) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் ஆண்டிமடம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ராமானுஜத்திடம் விசாரணை செய்ததில் கடந்த 14-ந் தேதி இரவு கவரப்பாளையம் கிராமம் அண்ணா வீதியில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெயபிரகாஷ் என்பவர் , வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரொக்க பணம் 1000 கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் அங்கு திருடிய நகைகளை கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு தனியார் வட்டி கடையில் அடகு வைத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் அடகு வைத்த நகைகளை மீட்டனர்.

பின்னர் ராமானுஜத்தை ஜெயங்கொண்டம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News