செய்திகள்
திருவிடைமருதூரில் கோவில் குளத்தில் மிதந்த ஆண் பிணம்
திருவிடைமருதூரில் கோவில் குளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது.
இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், குளத்தில் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி திருவிடை மருதூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குளத்தில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.