செய்திகள்

ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏக்கள் ஆய்வு

Published On 2018-07-28 10:21 GMT   |   Update On 2018-07-28 10:21 GMT
ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர். #MLAstudy

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறை, தும்பல், பாப்பிநாயக்கன்பட்டி, செக்கிடிபட்டி, தாண்டானூர், கொட்ட வாடி, குமாரபாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், வைத்தியகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடைவசதி, கழிப்பிடம், சாலை, மின்விளக்கு, ரேசன்கடை, பஸ்வசதி குறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னதம்பி, ஏற்காடு எம்.எல். ஏ சித்ரா ஆகியோர் குறைகளை கேட்டனர். அப்போது பெத்தநாயக்கன் பாளையம் தாசில்தார் பிரகாஷ், பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, வட்டாரவளர்ச்சி அலுவலர் சாந்தி, பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், தெற்கு ஒன்றியசெயலர் முருகேசன், நரசிங்கபுரம் நகர செயலர் மணிவண்ணன், ஏத்தாப்பூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் குப்புசாமி, உட்பட பலர் கலந்து கொண்டு மேற்கண்ட அனைத்து ஊர்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து குறைகளை கேட்டு அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

Tags:    

Similar News