செய்திகள்

கோவையில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2018-07-27 19:58 IST   |   Update On 2018-07-27 19:58:00 IST
முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் செயினை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். #chainsnatching
கோகை:

கோவை ஒப்பணகார வீதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சாந்தா (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள டெய்லர் கடைக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் சாந்தாவின் அருகில் வந்து இந்தியில் பேசி  முகவரி கேட்டனர். 

அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போது கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த சாந்தா இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். #chainsnatching
Tags:    

Similar News