செய்திகள்

காங்கிரஸ் நிர்வாகி சிரஞ்சீவி தந்தை மரணம்- திருநாவுக்கரசர் இரங்கல்

Published On 2018-07-26 13:15 IST   |   Update On 2018-07-26 13:15:00 IST
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிரஞ்சீவியின் தந்தை மறைவுக்கு திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சிரஞ்சீவியின் தந்தை ஏ.கே. கிருஷ்ணன் இயற்கை எய்தியதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

தனது தந்தையை இழந்து வாடும் கே. சிரஞ்சீவி மற்றும், அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News