செய்திகள்
கீரனூரில் பிரண்ட்ஸ் பாய்ஸ் அணியின் சார்பில் கிரிக்கெட் போட்டி
கீரனூரில் பிரண்ட்ஸ் பாய்ஸ் அணியின் சார்பில் 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
கீரனூர்:
கீரனூரில் பிரண்ட்ஸ் பாய்ஸ் அணியின் சார்பில் 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதியில் நீர்பழனி எஸ்பிசிசி அணியினர் முதலிடம் பிடித்தனர். முதலிடம் பிடித்த நீர்பழனி எஸ்பிசிசி அணியினருக்கு, கீரனூர் நகரம் அம்மாமக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முத்து, மாநில இணைச் செயலாளர் கார்த்திக் பிரகாஷ், ஒன்றிய இணைச் செயலாளர் கேபிள் சங்கர் ஆகியோர் முதல்பரிசுக்கான தொகை ரூ.10010 மற்றும் கோப்பையும் வழங்கினர்.
இரண்டாம் பரிசு தொகை ரூ.7007- கீரனூர் பிரண்ட்ஸ் அணியினர் பெற்றனர். இதனை எம்.முத்து வழங்கினார். மூன்றாம் பரிசு ரூ.5005- கீரனூர் பாய்ஸ் அணியினர் பெற்றனர். இதனை ராஜேஷ் வழங்கினார். நான்காம் பரிசு ரூ.3003 -ஏதினிப்பட்டி அணியினர் பெற்றனர். இதனை ராஜ்குமார் வழங்கினார்.
ஜந்தாம் பரிசு ரூ.2002 - உடையாளிப்பட்டி அணியினர் பெற்றனர். பரிசளிப்பு நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கீரனூர் நகர செயலாளர் சுப்பிர மணியன், ரஜினி மக்கள் மன்ற குன்றாண்டார்கோவில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தொழிலதிபர் தங்க மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.