செய்திகள்
நிலத் தகராறில் விவசாயி கைவிரலை துண்டாக வெட்டிய 2 பெண்கள் கைது
செங்கம் அருகே நிலத் தகராறில் விவசாயி கைகளை வெட்டிய 2 பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 40). இவருக்கும் இவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் அலமேலுவுக்கும் வரப்பு சம்மந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை விஜயராஜிக்கும் அலமேலுவுக்கும் வரப்பு பிரச்சனை சம்மந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் அலமேலுவின் மருமகள் சுதா (30) என்பவர் விஜயராஜை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதை தடுக்க முயன்ற விஜயராஜின் கையில் வெட்டுபட்டு 3 விரல்கள் துண்டானது. இதில் அலறி துடித்த விஜயராஜை அக்கம்பக்கத்திலிருந் தவர்கள் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் அலமேலு மற்றும் அவரது மருமகள் சுதா 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். #tamilnews
செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 40). இவருக்கும் இவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் அலமேலுவுக்கும் வரப்பு சம்மந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை விஜயராஜிக்கும் அலமேலுவுக்கும் வரப்பு பிரச்சனை சம்மந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் அலமேலுவின் மருமகள் சுதா (30) என்பவர் விஜயராஜை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதை தடுக்க முயன்ற விஜயராஜின் கையில் வெட்டுபட்டு 3 விரல்கள் துண்டானது. இதில் அலறி துடித்த விஜயராஜை அக்கம்பக்கத்திலிருந் தவர்கள் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் அலமேலு மற்றும் அவரது மருமகள் சுதா 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். #tamilnews