செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2018-07-25 08:39 GMT   |   Update On 2018-07-25 08:39 GMT
திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். #BSNLEmployees
திண்டுக்கல்:

சம்பள உயர்வு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி சேவை, ஓய்வூதியர்களுக்கு நிதி ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர் அருளானந்தம், கன்வீன் ஆரோக்கியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

2017-ம் ஆண்டுக்கு பின் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பள உயர்வை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். #BSNLEmployees
Tags:    

Similar News