செய்திகள்

செங்கல்பட்டில் ரவுடி கொலையில் உறவினர் கைது

Published On 2018-07-25 11:48 IST   |   Update On 2018-07-25 11:48:00 IST
செங்கல்பட்டில் ரவுடி கொலையில் உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Rowdymurder

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுன் நாவலர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் சீனு என்கிற குள்ள சீனு. ரவுடி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று காலை சீனு வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார்.அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினார்கள்.

இதில் ரவுடி சீனு பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த கொலை தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

செங்கல்பட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. நகர செயலாளர் குமார், அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் ரவுடி சீனுவுக்கு தொடர்பு இருந்தது.

கொலையுண்ட ஆறுமுகம் சீனுவின் அக்காளை திருமணம் செய்திருந்தார். அதன் பிறகு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த ஆத்திரத்தில்தான் சீனு, ஆறுமுகத்தை கொன்றார்.

இதனால் ஆறுமுகத்தின் மற்றொரு மனைவியின் தம்பியானலால் அதற்கு பழி தீர்ப்பதற்காக கூலிப் படையை ஏவி ரவுடி சீனுவை கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக லாலை போலீசார் கைது செய்தனர். கூலிப் படையினரை தேடி வருகிறார்கள்.

கொலையுண்ட ரவுடி சீனு மீது குமார், ஆறுமுகத்தை கொலை செய்த வழக்கு தவிர குமாரின் தம்பி பார்த்திபனை கொலை செய்த வழக்கு, பட்டரவாக்கத்தை சேர்ந்த சிவா என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

Tags:    

Similar News