செய்திகள்

வடமதுரை போலீசில் காதலியுடன் தஞ்சமடைந்த தனியார் நிறுவன ஊழியர்

Published On 2018-07-22 12:07 GMT   |   Update On 2018-07-22 12:07 GMT
வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு தனியார் நிறுவன ஊழியர் காதலியுடன் தஞ்சமடைந்தார்.

வடமதுரை:

வடமதுரை அருகே குட்டம் தேவிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி (19). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு மில் வேலைக்கு சென்று வருகிறார். முத்துப்பாண்டி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 40 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது காயத்திரியுடன் பழக்கம் ஏற்பட்டது. உடனே இது காதலாக மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டாரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வாடிப்பட்டி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா இருவீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினார். காதல் ஜோடி மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே வாழலாம் என்று போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News