செய்திகள்

சேலம் மேட்டூர் அருகே காவிரியில் குளித்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

Published On 2018-07-22 06:25 GMT   |   Update On 2018-07-22 06:25 GMT
சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில், தீயணைப்புத்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். #Cauvery #Mettur
சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், 5 பேரையும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News