செய்திகள்

ஈரோடு முனிசிபல்சத்திரத்தில் பெண் திடீர் மாயம்: கணவர் போலீசில் புகார்

Published On 2018-07-21 15:45 IST   |   Update On 2018-07-21 15:45:00 IST
ஈரோடு முனிசிபல்சத்திரத்தில் மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு, நேதாஜி ரோடு, முனிசிபல்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சுஜா (வயது 42).

இவர் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடினர்.

ஆனால் சுஜா கிடைக்கவில்லை. அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. எனவே அவர் திடீரென மாயமானது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் முரளி புகார் செய்தார்.

மாயமான தனது மனைவி சுஜாவை கண்டுபிடித்து தருமாறு அதில் அவர் கூறி உள்ளார். அதன் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுஜாவை தேடி வருகின்றனர்.

இதேபோல் சென்னிமலையை அடுத்துள்ள அம்மாபாளையம் அன்புநகர் பகுதியில் வசிப்பவர் முனியப்பன்- மாரியம்மாள் தம்பதி.

இவர்களின் மகள் விஜயலட்சுமி (13). இவர் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பொது கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாரியம்மாள் தனது மகளை காண வில்லை என சென்னிமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News