செய்திகள்

நீடாமங்கலம் அருகே இளம்பெண் மாயம்

Published On 2018-07-19 19:36 IST   |   Update On 2018-07-19 19:36:00 IST
நீடாமங்கலம் அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோனாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகள் சூர்யா என்ற சுப்புலெட்சுமி. பி.ஏ. முடித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார்.

அவருக்கு பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் சூர்யாவை பல இடங்களில் தேடினர். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாததால் இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து மாயமான சூர்யாவை தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News