செய்திகள்

கடையநல்லூரில் இன்று பிளஸ்-2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-07-19 12:12 GMT   |   Update On 2018-07-19 12:12 GMT
கடையநல்லூரில் பள்ளிக்கு சரிவர செல்லாத பிளஸ்-2 மாணவியை தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் நாட்டாண்மை தெருவை சேர்ந்தவர் மயிலேறும் பெருமாள். இவரது மகள் கார்த்திகா (வயது17). இவர் தென்காசியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கார்த்திகாவின் தந்தை மயிலேறும் பெருமாள் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் கார்த்திகா சோகத்தில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவர் சரிவர பள்ளிக்கு செல்லவில்லையாம். இதையடுத்து கார்த்திகாவின் தாய் அவரை கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த கார்த்திகா இன்று காலை வீட்டில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி கடையநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News