செய்திகள்

நெய்வேலி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் கம்பி திருட்டு - வாலிபர் கைது

Published On 2018-07-18 10:31 GMT   |   Update On 2018-07-18 10:31 GMT
நெய்வேலி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் கம்பி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொல்லியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மின்உற்பத்தி நிலையம் உள்ளது.

இங்கு நேற்று மாலை செயற்பொறியாளர் சிலம்பரசன் ரோந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அங்கு 300 மீட்டர் காப்பர் கம்பிகளை திருடி ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். அவரை செயற்பொறியாளர் மடக்கி பிடித்து தெர்மல் போலீசில் ஒப்படைத்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். விசாரணையில் காப்பர் கம்பியை திருடியவர் நயினார் குப்பத்தை சேர்ந்த சண்முகம் (வயது30) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News