செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி

Published On 2018-07-18 10:06 GMT   |   Update On 2018-07-18 10:06 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அகரசோழதரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 42). லாரிடிரைவர். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சோழதரம் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜா தூக்கிவீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சோழதரம் போலீசார் விரைந்து  சென்று விபத்தில் இறந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த ராஜாவுக்கு அம்சவேணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். #tamilnews

Tags:    

Similar News