செய்திகள்

திருமானூர் அருகே மணல் கடத்திய பொக்லைன் எந்திரம், 2 லாரிகள் பறிமுதல்

Published On 2018-07-17 21:23 IST   |   Update On 2018-07-17 21:23:00 IST
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி பகுதியில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆற்றில் இருந்து லாரியில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்த வெற்றியூரை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (வயது 19), விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (26), கார்த்திகேயன் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து, பொக்லைன் எந்திரம்- 2 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News