செய்திகள்

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்

Published On 2018-07-16 12:12 GMT   |   Update On 2018-07-16 12:12 GMT
மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், கருவாகுறிச்சி காலனியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மகன் அவினாஷ் (வயது-19). இவர் தஞ்சையில் செயல்படும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அவர் கக்கரையில் உள்ள தனியார் மீன்பண்ணை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவினாஷ் படுகாயமடைந்தார். இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினர் சம்பவ இடம் விரைந்து சென்று அவினாசை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News