செய்திகள்

கல்வி உதவித்தொகை முகாம் தொடக்கவிழா - கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது

Published On 2018-07-14 16:34 GMT   |   Update On 2018-07-14 16:34 GMT
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கல்வி உதவித் தொகை முகாமின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது.
சிவகங்கை:

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை முகாமின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. அவர், முகாமை தொடங்கி வைத்து கல்வி கடனிற்கான விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி பேசியதாவது:- சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் இதர பிரிவினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை சிறுபான்மையின சமுதாய மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் சிறுபான்மையின மக்கள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் கல்விக்கடன் திட்டம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் வங்கிகளில் இருந்து பெற்ற கல்வி உதவித் தொகையை நல்ல முறையில் திரும்பி செலுத்த வேண்டும். தங்களுக்கு தெரிந்த தகவல்களை உடன் படிக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். சிறுபான்மையின சமூக மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கல்வித்தரம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தி சமூகத்தில் முன்னேற பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News