செய்திகள்

உடன்குடியில் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-07-14 13:30 GMT   |   Update On 2018-07-14 13:30 GMT
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடன்குடி:

உடன்குடி புதுமணை கோட்டைவிளையைச் சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 37) கட்டிட தொழிலாளி இவருக்கு குடி பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி தேவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியிடம் கோபித்து கொண்டு சென்ற முத்துபாண்டி காலை வரை வீடு திரும்பவில்லை. நேற்று மனைவி தேவி கணவனை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஊருக்கு ஒதுக்குபுறம் உள்ள அரளி பூந்தோட்டம் கிணற்றில் இறந்து கிடந்தார். 

திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து முத்துபாண்டி உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

இது சம்பந்தமாக குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News